நூலகம்

எமது வெளியீடுகள்

1. பாரதத் தாயின் பாத கமலங்களில் (2009) 

(ஆன்றோர்- சான்றோர் தினங்களின் தொகுப்பு)

2.தெய்வப்புலவரின் தேசிய சிந்தனை (2009, 2010)

(நாடு குறித்த திருவள்ளுவரின் சிந்தனைகள் தொடர்பாக, கவிஞர் குழலேந்தி எழுதிய நூல்)

3. தமிழ் வருட நாள்காட்டி – விக்ருதி ஆண்டு (2010-11)

(சித்திரை முதல் பங்குனி வரை- சான்றோர் நாட்களுடன்)

4. நிவேதனம் (2014) 

(சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின் போது வெளியானது; தேசபக்தர்கள், ஆன்மிக அருளாளர்களின் நாட்களும் இடம்பெற்றது).

5. சோழபுரத்து மன்னனும் திரிசிரபுரத்து பிள்ளையும் (2015)

(ராஜேந்திர சோழன் முடிசூடிய ஆண்டின் ஆயிரமாவது ஆண்டு, மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இருநூற்றாண்டு ஆகியவற்றின் கொண்டாட்டங்களை ஒட்டி வெளியிடப்பட்ட நூல்; தேசபக்தர்கள், ஆன்மிக அருளாளர்களின் நாட்களும் இடம்பெற்றது)

6. ஆச்சார்யர் இராமானுஜரும் அண்ணல் அம்பேத்கரும் (2016)

(வைணவம் காத்த மகான் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையும் தீண்டாமையை ஒழிக்க வந்துதித்த அண்ணல் அம்பேத்கரின் 125வது ஜெயந்தியையும் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட நூல்).

7. அண்ணலின் அடிச்சுவட்டில் (2018) 

(டாக்டர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கரின் 125வது ஜெயந்தியை ஒட்டி வெளியிடப்பட்ட நூல். எழுத்தாளர்கள் அரவிந்தன் நீலகண்டன், சேக்கிழான், ம.வெங்கடேசன், பேராசிரியர் கனகசபாபதி ஆகியோர் இந்நூலில் கட்டுரைகளை எழுதி உள்ளனர்.

8. பெண்மையைப் போற்றுதும்! (2018) 

(சகோதரி நிவேதிதையின் 150வது ஜெயந்தியை ஒட்டி 2018இல் வெளியிடப்பட்ட நூல். முனைவர் பிரேமா நந்தகுமார், பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன், மருத்துவர் சுதாசேஷையன், பேராசிரியர் வெ.இன்சுவை, எழுத்தாளர் இராதிகா மணாளன் ஆகியோர் இந்நூலில் கட்டுரைகளை எழுதி உள்ளனர்).

9. காண்டீபம் – காலாண்டிதழ் (10 இதழ்கள்- 2016 - 2018)

(தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் வெளியான காலாண்டிதழ் ‘காண்டீபம்’. 2016 ஐப்பசி- மார்கழி முதல் 2018 தை- பங்குனி வரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காண்டீபம் 10 இதழ்கள் வெளியாயின).

10. THE ROLL OF INTELLECTUALS IN NATION BUILDING (2018) 

(தேச வளர்ச்சியில் அறிவுஜீவிகளின் பங்கு என்ற ஆங்கில நூல் இது. சென்னையில் தே.சி.க. நடத்திய கருத்தரங்கின் தொகுப்பான இதனை பேராசிரியர் ப.கனகசபாபதி தொகுத்திருந்தார்).




No comments:

Post a Comment