20/09/2020

புரட்டாசி 2020 மின்னிதழ்

 

உள்ளடக்கம்

1. அமுத மொழி -9

-பண்டித தீனதயாள் உபாத்யாய

-ஆசிரியர் குழு

-ஜெயபிரகாஷ்நாராயணன்

-சேக்கிழான்

-இராமலிங்க வள்ளலார்

-பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்

-தெ.ஞானசுந்தரம்

-மு.வரதராசன்

-ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர்

- Sister Nivedita

-Editorial Team

12. இறைப்பற்றுடன் கருணாமூர்த்தியாகவும் திகழ்ந்தவர்!
-ஈரோடு என்.ராஜன்


அமுதமொழி- 9



முதலாளித்துவம், கம்யூனிசம் ஆகிய இரு முறைகளுமே,  பரிபூரண மனிதன், அவனது முழுமையான தன்மை,  அவனது அபிலாஷைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டன.  அவனை பணத்திற்காக பறக்கும் சுயநலவாதியாகக் கருதுகிறது ஒன்று; 
மற்றொன்றோ, கடுமையான விதிகளால் கட்டுப்படுத்தினால் ஒழிய எந்த நல்லதும் செய்ய தகுதியற்றவனாக அவனை நோக்குகிறது.  பொருளாதார, அரசியல் அதிகாரக்குவிப்பு, இரண்டிலுமே பொதிந்துள்ளது.  எனவே, இரண்டுமே மனிதனை மனிதத் தன்மை இழக்கும்படிச் செய்கிறது.


-பண்டித தீனதயாள் உபாத்யாய.
(ஏகாத்ம மானவ வாதம்- பக்: 91)


புரட்டாசித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

 -ஆசிரியர் குழு


லால் பகதூர் சாஸ்திரி


புரட்டாசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய 
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் 
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், புரட்டாசித் திங்கள்  (17.09.2020 - 16.10.2020)

போய் வருகிறேன் (கவிதை)

-ஜெயபிரகாஷ் நாராயணன்


ஜெயபிரகாஷ் நாராயணன்




ஓ… இந்த வாழ்க்கை
தோல்விகளின் தொகுப்பு.

வெற்றிக்கனி என் கைக்கு நேராக ஆடியபோதும்
என் பாதையில் வராதே என்று
நானே அதைத் தட்டிவிட்டேன்.

அறியாமையா நான் செய்தது? – இல்லை
வெற்றி எது? தோல்வி எது?
என் அகராதியில் அந்த வார்த்தைகளுக்கு
அர்த்தங்களே வேறு வேறு.

நான் புரட்சியைத் தேடுகிற வேட்டைக்காரன்.
ஒரு தனிப்பாதை போட வேண்டும்.
அதைத் தனித்திசையில் போட வேண்டும்.

வையத் தலைமை கொள்! (பகுதி- 3, 4, 5)

-சேக்கிழான்


(புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி)


3. நலம் விழையும் நாயகர்


 இனி நாம் ‘புதிய ஆத்திசூடியை 7 அம்சங்களாகத் தொகுத்துக் கொள்ளலாம். இந்தத் தலைப்புகளுக்குள், பாரதியின் ‘புதிய ஆத்திசூடிவரிகள், அவற்றின் மூல எண்களுடன் பட்டியலிடப்படுகின்றன.

 அ. பண்புநலம் கூறுபவை: 21


1. அச்சம் தவிர்

2. ஆண்மை தவறேல்

14. காலம் அழியேல்

16. கீழோர்க்கு அஞ்சேல்

26. சாவதற்கு அஞ்சேல்

27. சிதையா நெஞ்சு கொள்

37. ஞமலி போல் வாழேல்

39. ஞிமிரென இன்புறு

40. ஞெகிழ்வது அருளின்

46. துன்பம் மறந்திடு

45. தீயோர்க்கு அஞ்சேல்

47. தூற்றுதல் ஒழி

51. தொன்மைக்கு அஞ்சேல்

72. பேய்களுக்கு அஞ்சேல்

73. பொய்மை இகழ்

76. மானம் போற்று

84. மோனம் போற்று

85. மௌட்டியம் தனைக் கொல்

95. ரோதனம் தவிர்

96. ரௌத்திரம் பழகு

110. வௌவுதல் நீக்கு

 ஆ. உடல்நலம் வலியுறுத்துபவை: 17


3. இளைத்தல் இகழ்ச்சி

5. உடலினை உறுதி செய்

6. ஊண் மிக விரும்பு

9. ஐம்பொறி ஆட்சி கொள்

12. ஔடதம் குறை

17. குன்றெனெ நிமிர்ந்து நில்

23. கோல்கைக்கொண்டு வாழ்

38. ஞாயிறு போற்று

53. தவத்தினை நிதம் புரி

63. நொந்தது சாகும்   

64. நோற்பது கைவிடேல்

80. மூப்பினுக்கு இடங்கொடேல்

83. மொய்ம்புறத் தவம் செய்

88. யௌவனம் காத்தல் செய்

92. ருசிபல வென்றுணர்

93. ரூபம் செம்மை செய்

106. வீரியம் பெருக்கு

 இ. அறிவுநலம் வளர்ப்பவை: 13


13. கற்றது ஒழுகு

25. சரித்திரத் தேர்ச்சி கொள்

33. சைகையிற் பொருளுணர்

35. சோதிடம் தனை இகழ்

57. நீதிநூல் பயில்

59. நூலினைப் பகுத்துணர்

75. மந்திரம் வலிமை

89. ரஸத்திலே தேர்ச்சி கொள்

90. ராஜஸம் பயில்

94. ரேகையிற் கனிகொள்

98. லாவகம் பயிற்சி செய்

101. (உ)லோக நூல் கற்றுணர்

104. வானநூல் பயிற்சி கொள்

வெண்ணிலாக் கண்ணி (கவிதை)

 -இராமலிங்க வள்ளலார்

திருவருட்பிரகாச வள்ளலார்


திருவருட்பா
27. வெண்ணிலாக் கண்ணி (2847 - 2869) 


(சிந்து வகைப் பாடல்)


தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு
தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே. ...1

நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே
நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...2

சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுந்
தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே. ...3

இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்
இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே. ...4

தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்
சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே. ...5

குருவும் ஆசிரியரும்...


-பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்





1. ‘ஆசார்ய’ இலக்கணம்

ஆசார்யர் என்பதில் ஆசரணம், ஆசாரம், சர என்ற வார்த்தைகளின் ஸம்பந்தம் இருக்கிறது. ‘சர’ என்றால் நடப்பது. சரிதம், சரித்ரம் என்றால் நடத்தை (Conduct) . பல நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடப்பதால் தேச சரித்ரம், ஜீவ்ய சரித்ரம் என்றெல்லாம் சொல்கிறோம். நின்றபடியில்லாமல் ஒரு ஒழுங்கில் தொடர்ந்து போவது தானே ‘நடை’? இப்படி ஒரு வழிப்படி நடப்பதுதான் சரித்ரம். ஒரு வழியில் ‘ஒழுகுவது’ என்று தமிழில் சொல்வார்கள். ஜலம் ஒழுகுகிறபோது தாரையாக ஒரு தொடராகத்தானே விழுகிறது? இப்படிச் சில விதிகளின் படியே, அதைப் பின்பற்றிப் போவதுதான் ‘ஒழுகுவது’. ‘ஒழுக்கம்’ என்பது இதிலிருந்துதான் வந்தது. ‘சர’ தாதுவின் மேல் இதுவே ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஆசாரம்’ என்று இருக்கிறது. சாஸ்திர விதிப்பிரகாரம் ஒழுகுவது, தர்ம நூல்களின் ஒழுக்கம்தான் ஆசாரம். இப்படி நடப்பது ஆசரணம்.

ஆசார்யனுக்கு முக்கியம் இப்படி ஒரு ஒழுங்குமுறையில் நடந்து காட்டுவது. Basic –ஆக (அடிப்படையாக) ஸகல ஜனங்களுக்கும் ஸாதாரண தர்மங்கள் என்பதாக அஹிம்ஸை, ஸத்யம் முதலிய ஒழுக்கங்கள் இருப்பதோடு நம் ஹிந்து மதம் ஒன்றுக்குள்ளேயே அநேக ஸம்ப்ரதாயங்களுக்குத் தனி சாஸ்திரங்கள் ஏற்பட்டு, அவற்றில் தனித்தனி ஒழுக்கங்களும் சொல்லியிருக்கிறது. வைஷ்ணவர்களுக்கென்று ஒரு ஆசாரம்; மாத்வர்களுக்கென்று ஒன்று; சைதன்யர், நிம்பார்க்கர் இப்படிப் பல பெயரில் தனித்தனி ஒழுக்கங்களும், பழக்கங்களும், வழக்கங்களும் இருக்கின்றன. சைவர்களுக்கென்று தனி சாஸ்திரங்கள், அவர்கள் இன்னின்ன இப்படி யிப்படிப் பண்ண வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. சைவத்திலேயே ஸித்தாந்த சைவம், வீரசைவம், காஷ்மீரி சைவம், பாசுபாதம் என்று பல பிரிவுகள்.


வைஷ்ணவத்துக்குள்ளேயும் இப்படி ஏகாந்திகள், பாஞ்சராத்ரிகள், வைகாநஸர்கள் என்று sub-sections உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு set of rules [விதியமைப்பு முறை] இருக்கிறது. அத்வைதிகளுக்கு ஒரிஜனலாக ஸ்மிருதிகள் சொன்ன ரூல்கள் இருக்கின்றன.

இப்படி ஏதாவது ஒரு ஸம்ப்ரதாயத்தை சாஸ்த்ரோக்தமாகத் தானே அநுஷ்டித்துக் காட்டுகின்றவன் தான் ஆசார்யன்.


‘ஆசார்ய’ பதத்துக்கு definition [லக்ஷணம்] சொல்கிற ஸ்லோகம் சில பேர் கேள்விப்பட்டிருக்கலாம்.


ஆசிநோதி ஹி சாஸ்த்ரார்த்தாத்

ஆசாரே ஸ்தாபயத்யபி |

ஸ்வயம் ஆசரதே யச்ச

தம் ஆசார்யம் ப்ரசக்ஷதே ||

எவன் சாஸ்திரத்தின் அர்த்தங்களை ஆராய்ந்து, (‘பிறருக்கு அதை போதித்து’ என்பது இங்கே understood: சொல்லாமல் சொன்னது,) பிறரை அந்த சாஸ்த்ரங்களின் விதிப்பிரகாரம் நடக்கப் பண்ணுகிறானோ, (இப்படி ‘பிறத்தியாரை ஒரு ஆசாரத்தில் நிலைநாட்டுவது மட்டுமல்லாமல்’ என்பதும் understood ) தானே அந்த வழிப்படி நடந்து காட்டுகிறானோ அவனே ஆசார்யன் எனப்படுகிறான் — என்று அர்த்தம்.

ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் அகல்விளக்கு

-தெ.ஞானசுந்தரம்



மு.வரதராசன்


மு.வரதராசன்
(பிறப்பு: 1912 ஏப். 25 ,  மறைவு: 1974 அக். 10)

சென்ற நூற்றாண்டில் எத்தனையோ பேராசிரியர்கள் பணிபுரிந்தார்கள்; ஓய்வு பெற்றார்கள்; மறைந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் இன்று நினைவுகூரப்பட்டுப் போற்றப்படவில்லை. ஒரு சிலரே மறைந்தும் மறையாமல் வாழ்கிறார்கள். அவர்களில் சிலரை மாணவர்கள் மட்டும் நினைவுகூர்கிறார்கள்; மிகச் சிலரையே எல்லோரும் நினைந்து போற்றுகிறார்கள். அத்தகைய மிகச் சிலருள் ஒருவரே பேராசிரியர் மு.வ.

இருபதாம் நூற்றாண்டு கண்ட நிகரற்ற பேராசிரியர் டாக்டர் மு.வ. என்பது வரலாற்று உண்மை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மு.வ. என்னும் இரண்டெழுத்து, தமிழ் மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே ஒலித்த இரண்டெழுத்து மந்திரம் ஆகும். வட ஆர்க்காடு மாவட்டத் திருப்பத்தூரில் பிறந்த மு.வ. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அங்கேயே வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியைத் தொடங்கினார். தனியே படித்துப் புலவர் தேர்வில் மாநிலத்தில் முதல்வராகத் தேர்ச்சி பெற்று, அவ்வூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகி, பின் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து, பேராசிரியராக உயர்ந்து, சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியராகத் திகழ்ந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒளிர்ந்து புகழின் உச்சியில் மறைந்தார். அவரது வாழ்வு எளிய குடும்பத்தில் பிறந்து ஆர்வத்தாலும் உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து முன்னேற்றம் கண்ட பெருவாழ்வு நேரிய வாழ்வு.

ஆசிரியர்கள் மூன்று வகை. சிலர் மாணவர்களைப் பகைவர்களைப்போல் நினைப்பார்கள். இவர்கள் மாணவர்கள் செய்யும் சிறு தவறுகளைக்கூடத் தாங்கிக்கொள்ளாமல் தண்டிப்பார்கள். சிலர், மாணவர்களைத் தங்களிடம் பாடம் கற்க வந்தவர்களாக மட்டும் கருதுவார்கள். இவர்கள் பாடத்தை மட்டும் கற்பித்து மாணவர்களைத் தேர்வுக்கு ஆயத்தம் செய்வார்கள். சிலர் மாணவர்களைத் தங்கள் மக்களாகக் கருதி, எல்லா வகையிலும் துணை நிற்பார்கள். இவர்களே மாணவர்களை வாழ்வாங்கு வாழத்தக்கவர்களாக உருவாக்குபவர்கள். இவற்றில் இறுதிவகையைச் சேர்ந்தவர் பெருந்தகை மு.வ.

அவர் மாணவர்களுக்குப் பாடம்சொல்லும் ஆசிரியராக மட்டுமன்றி ஆதரவு நல்கும் தந்தையாகவும் திகழ்ந்துள்ளார். அவர்கள் குடும்பச் சூழல்நிலையை அறிந்து அதற்கேற்ப அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் புரிந்துள்ளார். மறைந்த பேராசிரியர் பொன். செüரிராசன் போன்ற எளிய மாணவர்களைத் தம் வீட்டிலேயே தங்கச்செய்து உணவும் தந்து படிக்க வைத்துள்ளார். மறைந்த பேராசிரியர் ப. இராமன் போன்ற சிலருக்கு விடுதிக்கட்டணமும் வேறு சிலருக்குக் கல்லூரிக் கட்டணமும் கட்டி உதவி புரிந்துள்ளார். இவ்வுதவிகளை எல்லாம் அடுத்தவருக்குத் தெரியாமலே செய்துள்ளார். மாணவர்கள் நல்வாழ்வுக்காகப் பல்கலைக்கழகத்தோடு போராடியுள்ளார். அவர் ஆசிரியப் பணியைத் தாம் வாழ்வதற்கான பணியாக மட்டும் கருதாமல் மாணவர்களை வாழ்விக்கும் பணியாகக் கருதி அரும்பாடுபட்டுள்ளார்.

தம்பிக்கு

-மு.வரதராசன்



(தமிழில் கடித இலக்கியத்தில் முன்னுதாரணமானவை மு.வ.வின் படைப்புகள். அவற்றில் ஒரு கடிதம் இது) 



அன்புள்ள எழில்
,

நீ எழுதிய கடிதங்கள் எனக்கும் சுவையாக இருந்தன. அன்னைக்கு எழுதிய கடிதங்களை அண்ணன் எப்படிப் பார்த்தான் என்று நீ எண்ணி வியப்பு அடையலாம். உன் கடிதங்கள் அன்னை மட்டும் அல்லாமல் அண்ணனும் படிக்க வேண்டிய கடிதங்கள்தான்.

அன்னையைக் கேட்டுத்தான் படித்தேன். "எழில் எழுதியவை" என்று அவற்றை எல்லாம் ஒருகட்டாகக்கட்டி அன்னை பீரோவில் வைத்திருந்தார். " இது என்ன அம்மா?" என்று கேட்டேன். உன் கடிதங்கள் என்று சொல்லி," நீயும் படிக்கலாமே" என்றார். பிறகுதான் படித்துப் பார்த்தேன். நீ ஒன்றும் கவலைப் படாதே. நானும் உன் கருத்து உடையவனே. நீ வயதில் இளையவன் அஞ்சாமல் உன்கருத்தைச் சொல்கிறாய்; எழுதுகிறாய். நான் உன்னைவிட உலக அனுபவம் மிகுந்தவன்; அதனால் உலகத்தைப் பற்றிய அச்சமும் மிகுந்தவன். ஆகையால் எதையும் சொல்லவும் எழுதவும் தயங்குகிறேன்; நீ உள்ளத்தில் உணர்ந்ததைக் கொட்டுகிறாய்; நான் உணர்ச்சி இல்லாதவன் போல் நடிக்கிறேன். இதுதான் வேறுபாடு; நீயே என்னைவிட ஒருவகையில் நல்லவன்.

நல்லவனாக இருந்தால்மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்கவேண்டும் அல்லவா? நன்மை வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு.

நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் எத்தனையோ பேர் கலங்கிக் கண்ணீர் வடித்து மாய்ந்திருக்கிறார்கள்; மாய்ந்துவருகிறார்கள். வல்லமை மட்டும் பெற்றவர்களும் எதிர்பாராதவகையில் நசுக்குண்டு அழிகிறார்கள். குடும்பங்கள் முதல் நாடுகள் வரையில் இதற்குச் சான்றுகள் காணலாம். தமிழ்நாட்டில் இருந்த பழங்காலத்து நல்லரசுகள் கலங்கி அழிந்ததை வரலாறுகளில் காணவில்லையா? ஜெர்மனி, ஜப்பான் முதலான வல்லரசுகள் அழிவுற்றதைக் கண்கூடாகக் காணவில்லையா? நல்ல மருமகளாக வந்து வாழத் தொடங்கிக் குடும்பத்தாரின் இன்னலைப் பொறுக்க முடியாமல் தற்கொலையோ மனவேதனையாலோ மாண்ட கதைகளை ஊர்களில் கேட்டதில்லையா? மகனையும் மருமகளையும் விருப்பம்போல் ஆட்டி வைத்து வல்லமை பெற்ற மாமியார், சில ஆண்டுகளுக்குப் பின் வாயும் கையும் அடங்கி மூலை வீடும் வேளைக் கஞ்சியும் கிடைத்தால் போதும் என்று ஏங்கும் கதைகளையும் கேட்டதில்லையா? இந்த விதியை நாம் இனியும் மறந்து வாழக்கூடாது. தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும் குடும்பம் குடும்பமாகவும் நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனிமேல் வல்லவர்களாகவும் வாழக் கற்றுக்கொள்ல வேண்டும். நல்ல தன்மையோடு வல்லமையும் சேரப்பெற்று வாழ வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ணகானம் (கவிதை)

- ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர்



ராகம்: தோடி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸ்
அ - ஸநிதபமகரிஸ


பல்லவி

தாயே! யசோதே! - உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)

அனுபல்லவி

தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே - இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே)

சரணங்கள்

1. 
காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க - முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்!
காலசைவும் - கையசைவும் - தாளமோடிசைந்து வர
நீலவண்ணக் கண்ணனிவன் *நிர்த்தனமாடுகிறான்!
பாலனென்று தாலியணைத்தேன்! - அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் - வாயில் முத்தமிட்டாண்டீ!
பாலனல்லடி! உன்மகன் - ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன்
நாலுபேர்கள் கேட்கச் சொல்ல - நாணமிக வாகுதடீ! (தாயே)

2. 
அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும்
அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே - கண்ணன்
தின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை - அந்த
விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!
நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி
சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ
நந்தகோபற்கிந்தவிதம் - அந்தமிகு பிள்ளைபெற
நல்லதவம் செய்தாரடி - நாங்கள் என்ன செய்வோமடி (தாயே)

Reminiscences of Swami Vivekananda

- Sister Nivedita 


Sister Nivedita



1. Calcutta, February 15, 1899: 

My lecture on Kali came off on Monday. The Albert Hall was crammed. The Chairman spoke against Kali and me, and was very touching, when unfortunately a devotee got up and amidst tremendous excitement called him all sorts of names. I am sorry to tell you that I laugh whenever I think about it all. Swami was greatly pleased about the lecture, and I trust that there is some reason, for I have several times since been inclined to think that I had done nothing but harm. You see the — declare that that was not Kali worship, and that only what appealed to their lowest feelings was understood by the mob.

Anyway, the Kalighat people have asked me to speak on Kali worship there, at Kalighat. It may not come to anything, but Swami thinks that would be the greatest blow that could be struck against exclusiveness. One lovely gift my lecture has brought me is the friendship and enthusiasm of a young boy full of noble impulses and freshness. I have found out the culminating point of sacrifice, and wonder if I could express it. It seems that the sacrifice of animals only goes on till the devotee is strong enough to offer himself instead, and then, like the Pelican he draws his own blood, and buries the feet of the Mother in flowers dipped in it. To me it explains and justifies the whole. I don't know how you will feel about it. Everyone seemed to know about that when Swami explained it to me, so I suppose it is recognized.

Yesterday morning two of us went early to be blessed by the old Devendra Nath Tagore. Swami sent word early that he was particularly pleased, and I told the old man this, and said I felt that I was making Swami's pranams as well as my own. He was quite touched, said he had met Swami once when wandering round in a boat, and would greatly like him to come to him once more. When I told Swami, he was wonderfully moved, and said, "Of coarse I'll go, and you can go with me, and fix a day as soon as you please!" It seems that as a boy he clambered up into Mr. T's boat and put anxious questions about Advaitism, and the old man paused and said gently at last, "The Lord has only shown me dualism." And then he had patted him and said he had the yogi's eyes.

2. Calcutta, February 21, 1899: 

My Kali lecture had been a good foundation for bringing Swami to an issue with some friends, whom we were visiting. And so the talk had been all of symbolism. He said,"Poor M. has never studied the history of symbolism. That is why he does not understand that the natural symbols are no good. You see I had a curious education; I went to Shri Ramakrishna and I loved the man, but I hated all his ideas. And so for six years it was hard fighting all the time. I would say, I don't care in the least for this thing you want me to do', and he would say, 'Never mind, just do it, and you will see that certain results follow.' And all that time he gave me such love; no one has ever given me such love, and there was so much reverence with it. He used to think, "This boy will be So-and-so', I suppose, and he would never let me do any menial service for him. He kept that up to the very moment of his death too. He wouldn't let me fan him, and many other things he would not let me do."

3. Calcutta, March 12, 1899: 

Last night a monk called, and when I said I wanted to interview Swami for Awakened India, offered to take me back at 6 in the house-boat, if I would drive home. S. came too, in order to bring me home, so we walked. We got there at 8 o'clock. Swami had been sitting beside the fire under the tree.... When I had interviewed him, he said, "I say, Margot, I have been thinking for days about that line of least resistance, and it is a base fallacy. It is a comparative thing. As for me, I am never going to think of it again. The history of the world is the history of a few earnest men, and when one man is earnest the world must just come to his feet. I am not going to water down my ideals, I am going to dictate terms."... 

A GUIDING SPRIT FOR IDEAL JOURNALISM

Pandit Deenndayal Upadhyay


Pandit Deenndayal Upadhyay
(1916  Sep. 25 – 1968 Feb. 11)

God on this earth not only creates everyone but also endows everyone with some special quality. But there are also certain people whose talent is multi dimensional. If they get an opportunity for "development", the become "Great". Such was the persona of Pandit Deendayal Upadhyaya. In such a simple looking man were reflected different aspects of a social thinker, economist, educationalist, politician, writer, journalist, speaker, organizer etc. All these talents bloomed as the opportunities arrive. Though its is a different matter that he is mainly known for his organizing capability, serious thinking and for being a skillful political leader. First and the foremost thing to remember is that Deendayal ji represented an era when journalism was an ideal and not a subject for crass commercialization. During our struggle for freedom, many of our great leaders used journalism for cause of the nation and for awakening the people of the country. Especially in Hindi and regional languages, one might hardly find and editor who took up this job at that time for earning his livelihood. So it is quite natural that Pandit ji's personality reflected a journalist with missionary zeal and not having commercial considerations.

During the publishing of Rashtradharm, the journalist within Pandit ji first came to light with publication of monthly "Rashtradharm" from Lucknow in 1940s. The publication was meant for spreading the ideology of nationalism. Though he did not have his name printed as editor in any of the issues of this publication but there was hardly any issue which did not have his long lasting impression due to his though provoking writings. He chose to publish those items which had a positive side. He never had a problem with the criticism of anti-people thoughts or movements unless the language was balanced and the criticism was healthy. Later On Panchjanya weekly and Daily Swadesh also started getting published from there where the present Prime minister Mr. Atal Bihari Vajpayee was appointed as an editor. After sometime Deendayal ji was asked to work in the polictial field. There he had regular interaction with scribes and he had to issue statements quite frequently.

இறைப்பற்றுடன் கருணாமூர்த்தியாகவும் திகழ்ந்தவர்!

-ஈரோடு என்.ராஜன்



பத்மஸ்ரீ பி.ஆர்.கிருஷ்ணகுமார் வாரியார் 
(தோற்றம்: 1951 செப். 23 - மறைவு: 2020 செப். 16)

செப்டம்பர் 16 -ஆம் தேதி கோயமுத்தூரில் காலமான பத்மஸ்ரீ டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் வாரியாரை நன்கு அறிந்தவர்களுக்கு அவருடைய கண்டிப்பான இயல்பும் நடைமுறையும் தெரிந்திருக்கும். தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்கின்ற அவருடைய பாணியைக் கண்டு பலருக்கு பயமும் அஜீரணமும் ஏற்படுவதுண்டு.

ஆனால், கிருஷ்ணகுமார் என்ற தனிப்பட்ட நபரின் இதயம் எந்த அளவுக்கு விசாலமானது என்பதையும், அவருடைய இறைப்பற்று, நலிந்தோர் மீதும் ஏழை எளிய மக்கள் மீதும் அவர் கொண்டிருந்த அக்கறை, பரிவு, குறிப்பாக இறை பக்தர்களை பற்றி அவருக்கே உரிய ரீதியில் கொண்டிருந்த தீர்க்கமான கருத்துகள் பற்றியும் தெரிய வேண்டுமென்றால், அவரை நெருங்கித் தெரிந்துகொள்ள வேண்டும்.

2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2017 செப்டம்பர் வரை அவர் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தினுடைய தேசியத் தலைவராக இருந்தார். அப்பொழுது நிகழ்ந்து கொண்டிருந்த சில விஷயங்களைப் பற்றி குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது அவரை நேரில் பார்க்கவோ அல்லது அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவோ செய்து, அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொண்டிருந்தேன். அப்படி அவரிடம் மிக நெருக்கமாகப் பழகும்பொழுது தான், வெளிப்பார்வைக்கு முட்களைக் கொண்ட பலாப்பழத்தைப் போன்று தோன்றினாலும், உள்ளுக்குள் தேன்சுவையுள்ள பலாச்சுளைகளைக் கொண்ட அற்புத மனிதராக அவர் திகழ்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது .