15/02/2020

தமிழ் நீடு வாழ்க!

-கவியோகி சுத்தானந்த பாரதி



காதொளிரும் குண்டலமும் 
    கைக்கு வளையாபதியும் கருணைமார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் 
    மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிரும் திருவடியும்
    பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய்
    திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழி!


காண்க:  ஆன்மிகம் வளர்த்த கவி யோகி

No comments:

Post a Comment