15/05/2021

அன்புக்குரியவர்களுக்கு…

-ஆசிரியர் குழு

தனித்திரு! விழித்திரு!


கரோனா விழிப்புணர்வுத் தகவல்கள் 

கரோனா தொற்றின் (COVID-19) இரண்டாம் அலையில் நாம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இது பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. அவர்களுக்காக…

1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா?


இல்லவே இல்லை. நீங்கள் எப்பேர்ப்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சூழ்நிலைக்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை. (Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை, அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போது அதை சுவாசித்திருந்தாலோ பாதிப்பு ஏற்படவே செய்யும்).
2. கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும்?

இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5- 6 வது நாட்களில் காய்ச்சலோ, உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை காத்திருந்து பாதிக்கும் காலம் (Incubation Period) இந்த வைரஸ்க்கு இருக்கிறது.

3. கரோனா வைரஸ் வந்து போனதே தெரியாமல் பலர் இருக்கலாம் என்று கூறுகிறார்களே உண்மையா?

ஓரளவு உண்மை. ஆனால் ஏதாவது ஒரு அறிகுறியையாவது அவர்கள் அனுபவித்து இருப்பார்கள். அது காய்ச்சலாகவோ, லேசான சளியாகவோ, உடல்வலியாகவோ இருந்து இருக்கலாம். எந்த அறிகுறியும் தராமல் கரோனா வைரஸ் உங்கள் உடலை விட்டு நீங்கி இருக்காது. வெளிப்புற அறிகுறி உங்களுக்கு தெரியாவிட்டாலும் CT Lungs எடுத்துப் பார்த்தால் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. எனவே ஒரு அறிகுறியையாவது நீங்கள் அனுபவிப்பீர்கள்.

4. எனக்கு இருமல், காய்ச்சல் இருக்கிறது. ஆனால் சோதனை செய்ய பயமாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு இருமல், காய்ச்சல் ஒரு நாள் இருந்தால் கூட யோசிக்காமல் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் RT PCR பரிசோதனைக்கு உங்கள் மாதிரியை கட்டாயம் கொடுங்கள். உயிர் காக்க முன்னரே நாம் நடவடிக்கைகள் எடுத்து கொள்ளலாம். பயந்துகொண்டு சோதனை செய்யாமல் இருந்தால், வைரஸ் பல்கிப் பெருகி உங்கள் உயிருக்கே உலை வைக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லும்போது உங்களால் பலருக்கு பரவ வாய்ப்பும் இருக்கிறது.

5. கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் பேசினாலோ, அவர் சென்ற அறைக்கு சென்றாலோ, அவர் தொட்ட பொருளைத் தொட்டாலோ நாம் தொற்றுக்கு உள்ளாகி விடுவோமா?

அமெரிக்காவின் CDC வெளியிட்ட தரவுகளின் படியும் உலக சுகாதார நிறுவனத்தின் கடந்த ஒரு வருட ஆய்வறிக்கையின் படியும், 99 சதவீதம் மூக்கு வழியாகத் தான் இந்த கரோனா வைரஸ் பரவுகிறது. அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருள் மூலமாக இன்னொருவருக்கு பரவுவது என்பது 0.001 வாய்ப்பு தான் என்று உலக சுகாதார நிறுவனமே கூறி இருக்கிறது. அப்படிப் பரவி இருந்தால் இதற்குள் உலக மக்கள்தொகையில் பாதி அழிந்து இருக்கும். கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்முவதன் மூலமும் இருமுவதன் மூலமாகவும் தான் அதிகம் பரவுகிறது.

6. பிறகு ஏன் கோலப்பொடி போல குளோரின் பொடியையும் மருந்தையும் கரோனா பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிலும் அலுவலகத்திலும் தெளித்து சுத்தம் செய்கிறார்கள்? அவ்வாறு செய்வதால் கரோனா அழிந்து விடுமா?

கண்டிப்பாக இல்லை. கரோனா பரவிய நேரத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டு இந்த வைரஸ் பற்றிய தெளிவு உலக சுகாதார நிறுவனத்திடம் இல்லை. கடந்த ஆண்டே உலக சுகாதார நிறுவனம் ”கிருமிநாசினியை வீட்டிலும் அலுவலகத்திலும் தெளிப்பதால் கரோனா வைரஸ் ஒழியாது’’ என்று தெளிவாகக் கூறிவிட்டது. இவ்வாறு தெளிப்பதால் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் சாகுமே தவிர, கரோனா வைரஸ் அழியாது.

7. ஏன் சிலர் லேசான அறிகுறிகளாலும் சிலர் தீவிர அறிகுறிகளாலும் பாதிக்கப்படுகின்றனர்?

இதற்கு பல காரணங்கள் உள்ளன. வயது, ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டது என பல காரணங்கள் உள்ளன. ஆனாலும் முக்கிய காரணம், நீங்கள் எந்த அளவுக்கு வைரசால் (Viral Dose) பாதிக்கப் படுகிறீர்கள் என்பதாகும். அதிக அளவு வைரஸுக்கு நீங்கள் Expose ஆனால் தீவிரத் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. குறைந்த அளவு Viral Doseக்கு நீங்கள் Expose ஆனால் குறைவான பாதிப்புக்கு உள்ளாகலாம். அதே நேரத்தில் உடலின் உச்சபட்ச நோய் எதிர்ப்புப் போராட்டமான Cytokine Storm அதாவது நம் உடல் சொந்த செல்லையே தாக்கிக் கொல்லும் நிலைக்கு உங்கள் உடல் சென்றாலும் உயிரிழப்பு ஏற்படும்.

8. கரோனா Positive என்று அறிய வந்தால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் பதறக் கூடாது; யாரிடமும் மறைக்க கூடாது. வீட்டில் உள்ளவரிடம் தெரியப்படுத்தி 14 நாட்களுக்கு தனி அறையில் இருக்க வேண்டும். வெளியே வரவே கூடாது. முதல் நாளிலேயே உங்கள் நுரையீரலை CT Scan எடுத்துப் பார்த்து விடுவது நல்லது. தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். பெரும்பாலானோருக்கு காய்ச்சல் முதல் மூன்று நாட்களிலேயே குணமாகி, மற்ற அறிகுறிகளான இருமல், உடல் வலி தொடர்கிறது. ஆனால் தொடர் காய்ச்சலை கவலைகொள்ள வேண்டிய விஷயமாகக் கருத வேண்டும்.

9. என்னென்ன மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்?


காய்ச்சலைக் குறைப்பதற்கு Paracetamol மாத்திரையையும், இருமலைக் குறைக்க Antibiotics ஆன Cefixime or Azithromycin or Amoxcyillin மாத்திரைகளையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து காலை, இரவு என உட்கொள்ளும் பட்சத்தில் ஐந்து நாட்களில் உங்களுக்கு உடல் முன்னேற்றம் தென்படும்.

10. எப்போது நாம் அச்சம் கொள்ள வேண்டும்?

கரோனா பாதித்து 5, 6, 7 ஆம் நாட்கள் மிக முக்கியமானது. அப்போது உங்களுக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுவிட வேண்டும்

11. என்ன சாப்பாடு சாப்பிட வேண்டும்?

வழக்கமான சாப்பாடு சாப்பிட்டாலே போதுமானது. அதே நேரத்தில் அதிகமான நீர் குடிக்க வேண்டும். பழச்சாறு தவறாமல் பருக வேண்டும். புரதமே உடலின் கட்டுமான வீரர்கள். எனவே சைவம் என்றால் பருப்பு வகைகளையும், அசைவம் என்றால் சிக்கன், மீன் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உங்களுக்கு சுவை, மணம் போன்ற உணர்வுகளை இழந்து இருப்பீர்கள்; சாப்பிட முடியாது. என்றாலும் சாப்பிட்டே ஆக வேண்டும் தவறாமல். முக்கியமான விஷயம் ஒன்றே ஒன்றுதான். உங்கள் உடல் ஆற்றலை இழக்கக் கூடாது; அவ்வாறு இழக்கும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அதிகத் தொற்றுக்கு அதுவே வழி வகுக்கும்.

12. Walking, Yoga போன்றவற்றை செய்யலாமா?

தாராளமாகச் செய்யலாம்- நீங்கள் அடைந்து இருக்கும் அறைக்குள் மட்டுமே. ஆனால் இதையெல்லாம் செய்ய உங்கள் மனம் ஒத்துழைக்காது என்பதே உண்மை. ஏனெனில் அதிக உளவியல் பாதிப்புக்கு உள்ளாகும் போது உங்களால் சகஜமாக இருக்க முடியாது.

13. ஏன் கரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர்?


நோய் பற்றிய புரிதல் இல்லாததும் அறிவியல் விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம். இது ஒரு நுண்கிருமித் தொற்று. அதே நேரத்தில் அசிங்கப்படக் கூடிய நோய் ஒன்றும் அல்ல. இது வல்லரசு நாடுகளின் அதிபர்கள் முதல் பாமர மக்கள் வரை யாரை வேண்டுமானாலும் பாதிக்கக் கூடிய தொற்று. எனவே பாதிப்பு வந்த உடன் நாம் சொன்னால் மட்டுமே, மற்றவர்கள் நம்மிடம் வராமல் இருக்கவும் நம்மால் பிறருக்கு பரவாமல் இருக்கவும் விழிப்புணர்வுடன் இருக்க முடியும். இதுவே நாம் செய்யும் சமூகக் கடமை. அதே நேரத்தில் உங்கள் அனுபவங்களைப் பகிர்வதன் மூலம் பலர் எச்சரிக்கையுடன் இருப்பர். வைரஸ் பரவலின் சங்கிலியை அறுத்தாலே கரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.

14. கரோனாவால் பாதிக்கப்பட்டால் நம் உடல் மீண்டும் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புண்டா ?

இயற்கையாகவே நம் உடல் எல்லா விதமான வைரஸ், பாக்டீரியாவை எதிர்கொள்ளும் திறன் உடையதுதான். ஒரு புதுவிதமான வைரஸ் உள்ளே வரும்போது தான் நம் உடல் திணறும். அந்தத் திணறலே காய்ச்சல், இருமல், உடல்வலியாக வெளியே தெரிகிறது. அதாவது நோயின் தாக்கத்தை நமக்கு நம் உடல் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் வைரஸை முழுமையாக நம் உடல் போரிட்டு வென்றவுடன் நம் உடலில் Antibodiesஐ உற்பத்தி செய்துவிடும். இது அடுத்த நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும்.

ஆனால் கரோனாவைப் பொருத்த வரை இயற்கையாகவே நம் உடலில் Antibodies உற்பத்தி ஆனாலும், சுமார் 6-9 மாதங்களே அந்தப் பாதுகாப்பு இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உங்கள் உடல் எந்த அளவுக்கு Antibodies உற்பத்தி செய்துள்ளது என்பதை கரோனா பாதித்த 21 நாட்களுக்குப் பிறகு Covid Antibody Test எடுத்துப் பார்த்தால் தெரியவரும். அந்தச் சோதனையில் Antibodies குறைவாக இருந்தால் நீங்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி அந்த Antibodies அளவை கூட்டிக் கொள்ளலாம். இது மீண்டும் தொற்றுக்கு உள்ளாவதில் இருந்து கூடுதல் பாதுகாப்பு தரும்.

15. தொற்றில் இருந்து தப்பிக்க மிகச் சிறந்த வழி என்ன?

Mask மட்டுமே. Mask-இன் முன் பகுதியை நாம் தொடவே கூடாது. அஹைத் தொட்டுவிட்டு கழற்றி நம் முகத்தைத் துடைத்தால் தொற்றுக்கு உள்ளாக நேரிடும். அதே போல கையுறையைப் பயன்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல மூக்கு மட்டுமே கரோனாவின் நுழைவாயில்.

16. கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமா?


கட்டாயமாக எடுத்துக் கொள்வது நல்லது. இது தீவிரத் தொற்று நிலைக்குக் கொண்டு செல்லாமல் உங்களைப் பாதுகாக்க உதவும். அதே நேரத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்டாலே கரோனா தாக்காது என்று எண்ணக் கூடாது.


***

முக்கியமான ஆலோசனைகள்:

# தினமும் 15-20 நிமிடங்கள் வெயிலில் இருங்கள்.

# குறைந்தது 7- 8 மணி நேரம் ஓய்வெடுத்துத் தூங்குங்கள்.

# தினசரி 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்; வெந்நீரை அதிகமாக அருந்துங்கள்.

# தினசரி நீராவி பிடியுங்கள். இதுவே கரோனாவுக்கு எதிரான, மிகச் சிறந்த, எளிய, செலவில்லாத வழிமுறை.

# உண்ணும் உணவு சூடாக இருக்க வேண்டும்.

#கொரோனா வைரஸின் pH 5.5 முதல் 8.5 வரை இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே வைரஸை அகற்ற நாம் செய்ய வேண்டியதெல்லாம், வைரஸின் அமில அளவை விட அதிகமான கார உணவுகளை சாப்பிடுவதுதான். சில பரிந்துரைகள்:

அ. வாழைப்பழங்கள், எலுமிச்சை → 9.9 pH
ஆ. மஞ்சள் எலுமிச்சை → 8.2 pH
இ. அவக்கோடா பழம் - pH 15.6
ஈ. பூண்டு - pH 13.2
உ. மாம்பழம் - pH 8.7
ஊ. கமலா ஆரஞ்சு பழம் - pH 8.5
எ. அன்னாசிப் பழம் - 12.7 pH
ஏ. வல்லாரைக் கீரை - 22.7 pH

# புகை பிடித்தல், மது அருந்துதலை சில வாரங்களுக்கேனும் தவிருங்கள்.

***

மிக முக்கியம்- நீராவி பிடியுங்கள்!

நீங்கள் அருந்தும் சூடான நீர் உங்கள் தொண்டைக்கு நல்லது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் உங்கள் மூக்கின் ’பரணசால் சைனஸ்’ என்ற உடல் உள்ளுறுப்பின் பின்னால் 3 முதல் 4 நாட்கள் வரை மறைந்திருக்கும். நாம் குடிக்கும் வெந்நீர் அங்கு செல்வதில்லை. 4 முதல் 5 நாட்களுக்குப் பிறகு, பரணசால் சைனஸின் பின்னால் மறைந்திருந்த இந்த வைரஸ் உங்கள் நுரையீரலை அடைகிறது. அப்போது நீங்கள் சுவாசிப்பதில் சிக்கல் இருக்கும்.

அதனால்தான் நீராவி பிடிப்பது மிகவும் முக்கியம். இது உங்கள் பரணசால் சைனஸின் பின்புறத்தை அடைகிறது. இந்த வைரஸ் மூக்கில் இருக்கும்போதே நீராவியால் கொல்லப் பட வேண்டும்.

50 ° C இல், இந்த வைரஸ் முடக்கப்பட்டுள்ளது, அதாவது முடங்கிப்போகிறது. 60 ° C வெப்பநிலையில் இந்த வைரஸ் மிகவும் பலவீனமாகிவிடும்; அப்போது எந்த மனித நோய் எதிர்ப்பு சக்தியும் அதற்கு எதிராகப் போராட முடியும். 70 ° C க்கு இந்த வைரஸ் முற்றிலும் இறந்துவிடுகிறது. நீராவி பிடித்தல் இதைத்தான் செய்கிறது.

வீட்டில் தங்கியிருப்பவர் தினசரி ஒருமுறை கண்டிப்பாக நீராவி பிடிக்க வேண்டும். இதுவே மிகச் சிறந்த, எளிய, செலவில்லாத வழிமுறை.

காய்கறிகளை வாங்க சந்தைக்குச் சென்றால், ஒரு நாளுக்கு இரண்டு முறை நீராவி பிடியுங்கள். அலுவலகத்திற்குச் செல்பவர்கள் தினசரி 3 முறை நீராவி பிடிக்க வேண்டும்.

மருத்துவர்கள் கருத்துப்படி, கொவிட் -19 வைரஸ், மூக்கு மற்றும் வாயிலிருந்து நீராவியை உள்ளிழுத்து கொரோனா வைரஸை நீக்குகிறது. மக்கள் அனைவரும் ஒரு வாரம் நீராவி இயக்கி பிரசாரத்தைத் தொடங்கினால், தொற்றுநோய்ப் பரவல் விரைவில் முடிவுக்கு வரும்.
 

மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகள் இவை…

நாமும் கடைபிடிப்போம்!

நமது அன்புக்குரியவர்களுக்கும் இதனை தெரியப்படுத்துவோம்! 

No comments:

Post a Comment