13/05/2020

நீயும் நானும்...

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்




விழியோரம் திரண்ட
பீளையகற்றுவேன்.

நாசித்துவாரம் புகுந்த
மண் கழுவுவேன்.

கழுத்துப்பட்டை இறுக்கத்தை
தளர்வாக்குவேன்.

வெளியேற்றும் கழிவாய்ந்து
மருந்தூட்டுவேன்.

குளிப்பாட்டி, உடல் துவட்டி 
உணவூட்டி நீர் தருவேன்.

செல்லமாய் நீ கடிக்க
செல்லமாய் நான் அடிக்க
ஓடியாடி விளையாடி
ஓய்ந்தகால் பிடித்துவிட.

மெல்லக் கூம்பும் அல்லியென
இமைசொருகத் துயிலும்
உனக்கும் எனக்கும் இடையே
இறைவனுக்கு வேலையென்று
ஏதுமில்லை...

உள்மூச்சை உடனனுப்பி
வெளிமூச்சை இழுப்பது தவிர.


குறிப்பு:
கவிஞர் திரு. ஸ்ரீ.பக்தவத்சலம்,
தேசிய சிந்தனைக் கழகத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர்.

No comments:

Post a Comment