13/05/2020

நமது தின மின்னிதழ்- தேசிய முரசு!

-ஆசிரியர் குழு


கொரோனா கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தேசிய சிந்தனையைப் பரப்பும் அறிவியக்கம் தடையின்றி நடைபெற பல நடவடிக்கைகள் தேசிய சிந்தனைக் கழகத்தால் எடுக்கப்பட்டன.

ஜூம் செயலி மூலமாக தே.சி.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துரையாடல், இணையவழி சொற்பொழிவுகள், யுவ காண்டீபம் பணிகள் ஆகியவை மட்டுமல்லாது, தினசரி நல்ல செய்திகளின்  தொகுப்பாக ‘தேசிய முரசு’ வெளியாகி வருகிறது.

20.04.2020 முதல் தினசரி பிடிஎஃப். கோப்பு வடிவில் இந்த மின்னிதழ் வெளியாகி வருகிறது. தே.சி.க. மாநில அமைப்புச் செயலாளர் திரு.ம.கொ.சி.இராஜேந்திரன், மாநிலச் செயலாளர் திரு.ஆதலையூர் த.சூரியகுமார், கோவை மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.கவி.பூவரசன் ஆகியோரது ஒருங்கிணைப்பில் இவ்விதழ் சிறப்பாக வெளிவருகிறது.

நல்ல சேதிகள் மட்டுமல்லாது, சான்றோர் குறித்த அறிஞர் பெருமக்களின் யூ-டியூப் வாயிலான ஆடியோ பதிவுகளின் இணைப்புகளும் இந்த மின்னிதழில் கொடுக்கப்படுகின்றன.

இதுவரை வெளியாகி உள்ள ‘தேசிய முரசு’ இதழ்களை இங்கே உள்ள இணைப்பை சொடுக்கிப்
படிக்கலாம்:

http://online.fliphtml5.com/wgrbl/xnmj/#p=2



.



No comments:

Post a Comment