13/05/2020

தேசிய வாழ்க்கைக்கு எது அவசியம்?


-குருஜி கோல்வல்கர்

குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர்


நம்முடைய தேசிய வாழ்க்கைக்கு சாது, மகான்களின் வழிகாட்டல் மிகவும் அவசியமாகும்.

நம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் காவிக்கொடி, வேள்வித்தீயின் ஜுவாலைகளைப் பிரதிபலிக்கிறது. நம் வாழ்வு, உழைப்பு, விழிப்பு, பேச்சு எல்லாவற்றுக்கும் ஒரு லட்சியமாகத் திகழ்கிறது. அதன் அறைகூவலை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் பணியைச் செய்கிறது, சாது, மகான்களின் கூட்டம்.
.

நம்முடைய நடைமுறையில் பேராசை, பிறர் பொருளைக் கவர்தல் ஆகியவற்றைத் தடுக்க வேண்டும். பலவீனமடைந்துள்ள சமுதாயம் மீண்டும் மேன்மை அடைய வேண்டும்; அதன் பேராற்றலுக்கு முன் துஷ்டர்கள் நிற்கக்கூட முடியாத அளவிற்கு சமுதாய வாழ்க்கை சுத்தமான உள்ளன்பு வாய்ந்ததாக வேண்டும். ஆனால் 'இந்தச் செல்வம் என்னுடையது' என்ற மனோபாவனையுடன் அல்ல.

'இது சமுதாய சேவைக்காக பரமாத்மா எனக்கு அளித்தது. இதை சமுதாயத்திற்கே அர்ப்பணிப்பேன்' - இந்த அடிப்படையை வைத்து ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்ற உணர்வை சாதுக்கள் மண்டலி (கூட்டமைப்பு) யின் வழிநடத்தல் மூலம் பெறுவது நம் லட்சியம்.


(1952 -ல் கான்பூரில் நடந்த சாது சம்மேளனத்தில் நிகழ்த்திய உரையில் இருந்து...)

No comments:

Post a Comment