14/06/2020

அமுத மொழி- 6



கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் வாழ்வது மட்டுமே சுதந்திரம் அல்ல; மாறாக, கட்டுப்பாடான சூழலிலும்கூட சுதந்திரமாக இருப்பதுதான் சிறந்தது. 

விடுதலை என்ற சொல்லுக்கு எளிய, சாதாரண விளக்கத்தை அளிக்க இயலாது. அது தேசியம், அரசியல், தனித்தன்மை, பொருளாதாரம் ஆகிய நான்கு அம்சங்களின் அடிப்படையிலானது.

எந்த நாட்டில் அரசு ஜனநாயகரீதியாக இயங்குகிறதோ, 

எந்த சமுதாயத்தில் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவாகவும், கட்டுப்பாடுகள் குறைவாகவும் உள்ளனவோ, 

எந்த நாட்டின் பொருளாதார அமைப்பு தேசிய நலனுக்கு உகந்ததாகவும், தனிநபர் வாழ்க்கைத்தர மேம்பாட்டைப் பாதுகாப்பதாகவும், மக்களின் வசதியான வாழ்வை உறுதிப்படுத்துவதாகவும், திறமையின் அடிப்படையில் முன்னேறும் வாய்ப்பை அளிப்பதாகவும் உள்ளதோ,

அத்தகைய சுதந்திரமான-  தன்னிறைவான  நாட்டில் வாழ்கின்றவனே சுதந்திரமானவன்.

உண்மையாக சொல்லப்போனால், இத்தகைய சுதந்திரம் இப்போது நம்மிடம் இல்லை. 

நமது பழமையான பண்பாட்டின் சிறப்பியல்புகளின் அடிப்படையில், மேற்கண்ட அம்சங்களை நிறைவேற்றாவிடில், இந்தியா எக்காலத்தும் மகிழ்ச்சிகரமான இந்த சுதந்திரத்தை அடைய இயலாது.

-டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி

(பாட்னா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 
1937 நவம்பர் 27இல் நிகழ்த்திய உரையிலிருந்து...)




No comments:

Post a Comment