14/06/2020

உயிர்ப்பு (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்




பொன்னும்,கல்லும்
மண்ணில் கலந்துரையாடின.

கொஞ்சம் பொறு ...
கடவுளைத்தழுவும் அணியாவேன்
என்றது பொன்.

அப்போது பார் ...
கடவுளே நானாவேன்
என்றது கல்.

மௌனமாய் சற்றே
இளகியது மண்-
விதைபிளந்து எழுந்துவரும்
உயிர்ப்பச்சைக்கு வழி தந்து.



காண்க:
கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்


No comments:

Post a Comment