13/04/2020

60 தமிழ் வருடங்கள்- அழகிய ஓவியங்களில்...

-ஆசிரியர் குழு

சௌ.பூரணி- சௌ.அருணா

தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் திரு. ஆதலையூர் த.சூரியகுமார்- அவர்தம் மனைவி (மாநில மகளிரணி செயலாளர்) திருமதி ரேணுகா சூரியகுமார் தம்பதியரின் புதல்வியர்  சௌ. சூர்ய.பூரணி, சௌ. சூர்ய.அருணா ஆகிய இருவரும் மகத்தான ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றிவரும்- பிரபவ முதல்- அக்‌ஷய வரையிலான - 60 தமிழாண்டுகளை, அவற்றின் குணாம்சங்களின் அடிப்படையில் ஓவியங்களாக வரைந்திருக்கிறார்கள். அந்த ஓவியங்கள் சித்திரை முதல் நாள் (14.04.2020) கும்பகோணத்திலிருந்து காணொலி முறையில் காட்சிக்குத் திறக்கப்பட்டன. பல பெரியோர் அந்த நிகழ்வில் நவீனமுறையில் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தினர்.

அந்த ஓவியங்களை கோவை மாவட்ட தே.சி.க. இளைஞரணி செயலாளர் திரு.கவி.பூவரசன் அழகிய வடிவில் புரட்டும் புத்தக வடிவில் தொகுத்திருக்கிறார்.

கீழுள்ள இணைப்பை சொடுக்கினால் அந்த ஓவியப் புத்தகத்தைப் புரட்டிப் படிக்கலாம்.

http://online.fliphtml5.com/wgrbl/xkii/








No comments:

Post a Comment