13/04/2020

என் வீடு (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ பக்தவத்சலம்



உங்கள் வீடுகளில் நாய்கள் ஜாக்கிரதை;
என் வீட்டில் எப்போதும் நல்வரவு.

உங்கள் கதவுகளுக்கு வித விதமாய் பூட்டுகள்;
கதவுகளைத் தொலைத்தது என் வீடு .

உங்கள் வரவேற்பு அறைகளில் வாடிய மலர்கள்;
என் வாசலெங்கும் தேன் சூடிய மலர்கள். 

தெய்வீகம் ஒரு அறைக்குள் உங்கள் வீட்டில்;
எனது வீடே தெய்வீகமாய்.

உங்கள் வீட்டு குப்பைகளை என் வாசலில் கொட்டுகின்றீர்கள்;
அதனை உரமாக்கிக்கொள்ளும் என் வீடு.

என்ன கேட்கின்றீர்கள் ....
என் வீடு எங்கே என்றா ....

விரிவான முகவரியா?

கடலில் குளித்து
சிகரமேறி
சூரியனை வலம் வந்து
மையத்தில் நிலை பெற்றால்
அங்கே இருக்கும் என் வீடு.


குறிப்பு:

கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம், தேசிய சிந்தனைக் கழகத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர்.


No comments:

Post a Comment