17/07/2021

அமுதமொழி - 19


இந்த நாட்டை வயல்களும், ஆறுகளும், காடுகளும் அடங்கிய நிலப்பரப்பாக நினைக்காமல், இதனை அன்னை என நினைத்து வழிபடுகிறேன். 

அன்னையின் மார்பிலே ஒரு அரக்கன் வந்து உட்கார்ந்து கொண்டு அவளுடைய குருதியை உறிஞ்சுவானாகில் மகன் கவலை யாதுமின்றி, தனது மனைவி மக்களுடன் உல்லாசமாகக் காலம் கழிப்பானா? தன் அன்னையைக் காப்பாற்ற உடனே வழி தேடுவான் அல்லவா! 

இழிநிலை அடைந்துள்ள இந்நாட்டைக் காப்பாற்றும் வலிமை எனக்குண்டு. இதனை நான் உணர்ந்திருக்கிறேன். 

எனக்கு உடல் வலிமை இல்லை. ஆனால் நான் கத்தியையோ, துப்பாக்கியையோ, ஏந்திப் போர் புரியப் போவதில்லை. அறிவின் வலிமையினாலேயே போர் புரியப் போகிறேன்.

-மகரிஷி அரவிந்தர்

No comments:

Post a Comment