17/07/2021

நேதாஜி - ஓர் ஆவணம்

-சி.எம்.அமிர்தேஸ்வரன்


Resignation letter of Netaji Subash Chandra Bose,
from the then Indian Civil Services, 1921.

ஐ.சி.எஸ். மாணவரான சுபாஷ் சந்திர போஸ், பரீட்சை முடிவுகள் வெளியானதும் இந்தியாவுக்குத் திரும்பி வந்து அதிகாரியாகப் பொறுப்பேற்கவில்லை. ஆங்கிலேய அரசில் கௌரவத்துக்குரிய பதவிகளை வகித்திருக்க அவருக்கு சிறந்த வய்ப்பு இருந்தது. ஆனால், அவர் சுதந்திரப் போரில் குதிக்க முடிவெடுத்தார். எனவே,  தனது  ஆர்டர் கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னதாகவே தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

1921 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 -ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்ட அந்தக் கடிதத்தில் காணப்படும் அவரது கையெழுத்தின் அழகையும் நேர்த்தியையும் விவரிக்கிறது இந்தப் படம்.

மேலும் ஐ.சி.எஸ். பரீட்சைக்கு முன்னர் தான் பெற்றுக் கொண்ட அலவன்ஸ் தொகையான £ 100 (நூறு பவுன்ட்கள் மட்டும்) பணத்தை, தனது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்தியா அலுவலகத்தில் செலுத்தி விடுவதாக உத்தரவாதத்தையும் அந்த ராஜினாமா கடிதத்தில் உறுதி செய்துள்ளார்.

அவர் மக்களின் மனம் கவர்ந்த தலைவன் ஆனது வியப்பில்லை அல்லவா?




No comments:

Post a Comment