13/11/2020

பெண்களைப் போற்றும் மனு ஸ்மிருதி

-ஆசிரியர் குழு


மனு ஸ்ம்ருதியில் பெண்களைப் பற்றி சொல்லியிருப்பது என்ன?


மனு ஸ்மிருதி 3-56
யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா
பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.
***
மனு ஸ்மிருதி 9-3
பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷதி யௌவனே
ரக்ஷந்தி ஸ்தவிரே புத்ரா ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்யம் அர்ஹதி
உயர்ந்த மணிபோன்ற, ரத்தினம் போன்றவளான பெண்மணியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இளம் வயதில் தந்தையும், வளர்ந்த பின் கணவனும், வயதான காலத்தில் மகன்களும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும். பாதுகாக்காமல் விட்டுவிடக் கூடாது.
***
மனு ஸ்மிருதி 3-55
பித்ருபிர் ப்ராத்ருபிச் சைதை பதிபிர் தேவரைஸ் ததா
பூஜ்யா பூஷயிதவ்யாச்ச பஹு கல்யாணம் ஈப்ஸுபி
தந்தை, சகோதரர், கணவர், மைத்துனர் போன்ற ஒவ்வொருவரும் தாங்கள் நலமாக வாழ நினைத்தால், அவரவர் வீட்டில் உள்ள பெண்களை மதித்துக் கௌரவிக்க வேண்டும்.
***
மனு ஸ்ம்ருதி 3-58
ஜாமயோ யானி கேஹானி சபந்தி அப்ரதிபூஜிதா
தானி க்ருத்யாஹதானீவ வினச்யதி ஸமந்தத
எந்தெந்த இடங்களில் பெண்கள் தகாத, அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் இகழப்பட்டு, அவமானப் படுத்தப் படுகிறார்களோ, அந்த இடமே விஷம் உண்டவன் அழிவது போல் அழிந்து போகும்.
***
மனு ஸ்ம்ருதி 9-26
ப்ரஜனார்த்தம் மஹாபாகா பூஜார்ஹா க்ருஹதீப்தய
ஸ்த்ரிய ஸ்ரீயச்ச கேஹேஷு ந விசேஷோஸ்தி கச்சன
தாய்க்குலமான பெண்கள் போற்றத்தக்கவர்கள், வணங்கத் தக்கவர்கள், இல்லத்தின் விளக்காய் விளங்குபவர்கள், வீட்டின் மகாலட்சுமியாய்த் திகழ்பவர்கள்.
***
மனு ஸ்ம்ருதி 9-11
அர்த்தஸ்ய ஸங்க்ரஹே சைனாம் வ்யயே சைவ நியோஜயேத்
சௌசே தர்மே அன்னபக்த்யாம் ச பாரிணாஹ்யஸ்ய சேக்ஷணே
வீட்டின் பொருளாதாரம், தூய்மை, சுகாதாரம், வீட்டில் நடக்கும் வழிபாடுகள், உண்ணும் உணவு ஆகிய விஷயங்களில் பெண்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும்.
***
மனு ஸ்ம்ருதி 9-90
ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருசம் பதிம்
வயது வந்த பெண், தனது கணவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
***
மனு ஸ்ம்ருதி 9-130
யதைவாத்மா தத புத்ர புத்ரேண துஹிதா ஸமா
தஸ்யாம் ஆத்மனி திஷ்டந்த்யாம் கதம் அன்யோ தனம் ஹரேத்
மகனுக்கு நிகராக மகளையும் கருத வேண்டும். தந்தைக்கு ஒரு மகள் இருக்கும் போது, வேறொருவர் எப்படி அவர் சொத்தைக் கொண்டு செல்ல முடியும், மகளுக்கே சொத்தில் உரிமை உண்டு.
***
மனு ஸ்ம்ருதி 8-28
வசா அபுத்ராஸு சைவம் ஸ்யாத் ரக்ஷணம் நிஷ்குலாஸு ச
பதிவ்ரதாஸு ச ஸ்த்ரீஷு விதவாஸ்வாதுராஸு ச
பிள்ளையில்லாத, கணவனை இழந்த பெண்களோ, அல்லது கணவனைப் பிரிந்து தனியாக வாழும் பெண்களோ நாட்டில் இருந்தால், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
***
மனு ஸ்ம்ருதி 8-352
பரதாராபிமர்சேஷு ப்ரவ்ருத்தான் ந்ரூன் மஹீபதி
உத்வேஜன கரைர்தண்டை சின்னயித்வா ப்ரவாஸயேத்
பெண்களின் கற்புக்குக் கேடு விளைவிக்கும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். பிறர் இத்தகைய தவறைச் செய்வதற்கே அஞ்சும் அளவுக்கு அந்த தண்டனை இருக்க வேண்டும்.

***

குறிப்பு:

செம்மையான மொழியான சம்ஸ்கிருதமும் தெரியாது; பாரதத்தின் தொன்மையான சட்ட நூலான மனு ஸ்மிருதியையும் தெரியாது; ஆனாலும், அதீத ஹிந்து வெறுப்புடன் தமிழகத்தின் சில சிற்றறிவுக் கும்பல்கள் மனு ஸ்மிருதி குறித்து தவறான பிரசாரம் செய்து வருகின்றனர்.

மனு ஸ்மிருதியில் பெண்களை மோசமாக குறிப்பிட்டிருப்பதாக, ஏதோ ஒரு ஆங்கிலேயர் எழுதிய நூலை அடிப்படையாக வைத்துக் கொண்டு, வம்பு வளர்க்கும் வகையில் வெறுப்பூட்டும் துஷ்பிரசாரத்தில் அவர்கள் இறங்கி இருக்கிறார்கள்.

அந்தக் கயவர்களுக்கு சில எழுத்தாளர்களும் அரசியல் கட்சியினரும் துணை போகின்றனர். அந்த நாசகாரர்களால் நமது பண்பாட்டையோ, நெடிய பாரம்பரியம் கொண்ட ஹிந்து தர்மத்தையோ அழித்துவிட முடியாது. எனினும், மனு ஸ்மிருதியில் பெண்களைப் பற்றி என்ன கூறி இருக்கிறது என்பதை மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது நமது கடமை. அதற்காகவே, அரைகுறை அறிவுஜீவிகளின் தவறான பிரசாரத்தை உடைத்தெறியும் வகையில், மேற்கண்ட சில சுலோகங்கள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.




No comments:

Post a Comment