13/11/2020

முன்னொரு காலத்தில்...

-சுந்தர்ராஜசோழன்



1925-இல் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நம் நாட்டு மஹான்களை அறிமுகப்படுத்துகிற புத்தகம் ஒன்றை பாடத்திட்டமாக வைத்துள்ளார்கள். 

அதில் சுந்தரமூர்த்தி நாயனார், ஔவையார், சங்கராச்சாரியார், தாயுமானவர், பட்டினத்தார், விவேகானந்தர் என ‘மஹான்களின் சரித்திரம்’ என்று 17 பேரைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். இதில் வள்ளல் பச்சையப்ப முதலியார் பெயரும் உள்ளது. ஆங்கிலேய ஆட்சி நடப்பதால் ஐந்தாம் ஜார்ஜ் பெயரும் இடம்பெற்றிருக்கிறது கட்டாயத்தின் பேரில் என நினைக்கிறேன்.



மகாகவி காளிதாசனின் சரித்திரத்தில் “நாம் வசிப்பது இந்து தேசம். இதற்கு முற்காலத்தில் பரதகண்டம் எனப் பெயர்.இது நாகரீகத்தில் அனேக ஆயிர வருஷங்களாக முதிர்ச்சி அடைந்திருக்கிறது.மேனாட்டார்களுடைய நாகரீகங்கள் எல்லாம் சிலநூறு வருஷங்களுக்கு உட்பட்டவைதாம்” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்கள். 

ஒரு கல்வித்திட்டம் மாணவனை முதலில் பெருமை கொள்ளத்தக்கவனாக உணர வைக்க வேண்டும். நமது மாநிலத்தில் தற்போது நடப்பது என்ன?

குறிப்பு:

மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு. சுந்தர்ராஜசோழன், பிரபலமான முகநூல் பதிவர். தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் வகையில், கருத்து யுத்தத்தை முகநூலில் நடத்தி வருகிறார்.






No comments:

Post a Comment