16/09/2021

அமுதமொழி - 21



நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன். 
எங்கு இருக்கிறது லட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்
எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன்
எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்
லட்சிய சிகரத்தையும் 
அறிவுப் புதையலையும்
இன்ப அமைதியையும் 
உழைத்தடைய அருள் புரிவாயாக!

-ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

No comments:

Post a Comment